« Home | நன்றி » | நடப்புகள் பற்றி »

இந்தியா - புலிகள்

புலிகளின் அண்மைய அரசியல் அணுகுமுறை மாற்றமடைந்துள்ளது.

இரு தினங்களின் முன்தான் கருணாநிதி அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் செவ்வியொன்று அளித்திருந்தார்.
இந்நிலையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வெளிப்படையாக யாரும் அதிகம் எதிர்பாராத வகையில் செவ்வியொன்றை அளித்துள்ளார்.

இதில், இந்தியாவை நோக்கி நேரடியாகவே புலிகள் அரசியலை நகர்த்துகிறார்கள். இராஜீவ் கொலைக்கு நேரடியாக மன்னிப்புக் கேட்காவிட்டாலும் அதனை ஒத்துக்கொள்கிறார், அத்தோடு மனவருத்தத்தையும் தெரிவிக்கிறார்.

உடனடியாக இந்தியா எந்த மாற்றத்தையும் செய்யாது. ஆனால் தமிழக அரசியலில் இது புலிகளுக்குத் திருப்புமுனையாக இருக்கும். எதிர்காலைத்தைக் கருத்திற்கொண்டு சரியான நேரத்தில் இதைச் சொல்லியிருக்கிறார்களென்று புரிகிறது.

கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

//இராஜீவ் கொலைக்கு நேரடியாக மன்னிப்புக் கேட்காவிட்டாலும் அதனை ஒத்துக்கொள்கிறார், அத்தோடு மனவருத்தத்தையும் தெரிவிக்கிறார்.//

ஒத்துக்கொள்கிறார்???????

//இந்தியாவை நோக்கி நேரடியாகவே புலிகள் அரசியலை நகர்த்துகிறார்கள்.//

இந்திய அரசும் நேசக்கரம் நீட்டினால்
தெற்காசியாவில் இந்தியாவிற்கு எப்போதும் ஆதரவாக இன்னொரு நாடு கிடைக்கும்.

Post a Comment

Links to this post

Create a Link