« Home | இந்தியா - புலிகள் » | நன்றி » | நடப்புகள் பற்றி »

இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம்

இலங்கைத் தீவு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது?
நாலு வருடங்களாக இழுபட்டுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் யார் பலமாக இருக்கின்றனர்? பலமென்பது அரசியல், இராணுவம் என்றளவில் பார்த்தால் வேறு வேறு விடைகள் கிடைக்கலாம். யார் இப்போது யுத்தத்தைத் தொடங்கத் தயாராக இருக்கிறார்கள்? யார் யுத்தத்தைத் தவிர்க்க நினைக்கிறார்கள்?

இருவாரங்களுக்கு முன்புவரை, அரசாங்கம் யுத்தத்துக்குத் தயாராகவும் எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவும் இருப்பதாக தோற்றமொன்று இருந்தது. ஆகவே அரசு யுத்தத்தைத் தொடங்க காரணிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகப் பட்டது. புலிகள் எப்போதும் தாம் தாயராகவே இருப்பதாகச் சொல்லி வந்தாலும் பொதுப்பார்வையில் அவர்கள் யுத்தத்துக்குத் தயாரில்லை என்பது போன்ற தோற்றமே இருந்தது.

ஆனால் கடந்த இருவாரத்தில் நிலமை தலைகீழாக மாற்றமடைந்து விட்டதாகவே படுகிறது. இன்றைய நிலையில் எப்பாடு பட்டாவது அரசு ஒரு யுத்தத்தைத் தவிர்ப்பதையை விரும்புகிறது.

இந்நிலை எப்படி வந்தது? அதுபற்றிய பதிவு அடுத்ததாக.