« Home | சிங்கள அரசின் படுதோல்வியான தாக்குதல் » | கொழும்புத் தாக்குதலும் சம்பந்தப்பட்டவையும். » | மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம் » | இலங்கை - இன்றைய நிலை-1 » | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் » | இந்தியா - புலிகள் » | நன்றி » | நடப்புகள் பற்றி »

புலிகளின் புதிய வளர்ச்சி.

விடுதலைப் புலிகள் "பீரங்கி ஒருங்கிணைப்பாளர் பயிற்சிநெறி" என்ற பெயரில் முதுநிலை அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியை நிறைவு செய்துள்ளனர்.

புலிகளின் பீரங்கிப் படையணியின் வளர்ச்சி அபரிதமானது. முல்லைத்தீவுப் படைமுகாம் 1996 இல் வெற்றி கொள்ளப்பட்ட பின் அவர்கள் பீரங்கித் தாக்குதலில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார்கள். இரண்டு ஆட்லறிகளுடனும் எண்ணிக்கையில் மோட்டார்களுடனும் அவர்களின் வளர்சசி தொடங்கியது. சத்ஜெய நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பயிற்சிக் களம்.
ஜெயசிக்குறு தொடங்க முன் வவுனியாவில் ஆட்லறியால் மட்டும் ஒரு செறிவான தாக்குதலை நடத்தி எதிர்பார்த்ததை விட பெரிய பெறுபேற்றைப் பெற்றார்கள்.
பின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அரசபடையால் தொடங்கப்பட்ட பின் புலிகளின் மோட்டார்ப் படையணி விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையில் மட்டக்களப்பு புளுகுணாவ இராணுவ முகாமல் கைப்பற்றப்பட்ட ஒரு ஆட்லறியும் புலிகளுக்குப் பலம் சேர்த்த்து.

ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைதான் புலிகளின் எறிகணை வீச்சுப் பலத்தைப் பெருக்கியது. அவர்களின் திறமையை வளர்த்த்து. துல்லியத் தன்மையை நன்கு வளர்த்துக்கொண்டார்கள். ஜெயசிக்குறு என்று மட்டும் நின்றுகொள்ளாது பல்வேறு பெயர்களில் வன்னி முழுவதும் போர் விரிவு படுத்தப்பட்போது புலிகளின் எறிகணைவீச்சுக் களமும் நன்கு விரிவுபடுத்தப்பட்டது. எல்லா முனையிலும் சண்டையை எதிர்கொள்ளும் வலுவோடு மிகத்திறமையாக பீரங்கிப் படையணி வளர்ச்சி பெற்றது.

பின்வந்த மிகப்பெரிய வலிந்த தாக்குதல்களில் புலிகள் என்றுமில்லாதவாறு பீரங்கிப் படையணியைப் பயன்படுத்தினர். ஓயாத அலைகள் -2 இல் கிளிநொச்சியை மீட்டதில் கணிசமான பங்கை ஆற்றியது பீரங்கிப்படையணி. அதேநேரம் எதிரிகளின் கட்டளை மையங்கள், ஆட்லறி நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு புலிகளின் ஆட்லறிப்படையணியும் வளர்ச்சி பெற்றது. பல தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்கிடையில் பல்குழல் ஆட்லறியையும் புலிகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதன்மூலம் தனியே சிங்களப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை மட்டும் புலிகள் வைத்திருக்கவில்லை என்ற செய்தி வெளிவந்தது.

ஒரு வருட முழுமையான தயார்ப்படுத்தல்களின் பின் ஓயாத அலைகள்-3 தொடங்கிய போது புலிகளின் பீரங்கிப்படையணியின் வளர்ச்சி மிகப்பெரிய பாய்ச்சலாக இருந்தது. அந்த நடவடிக்கையில் முழுப்பங்குமே பீரங்கிப்படையணிதான் என்றளவில் ஓயாதஅலைகள் -3 இன் தொடக்கத் தாக்குதல்கள் அமைந்தன. மிகக்குறைந்த மனித இழப்புக்களோடு வன்னியின் பெருநிலப்பரப்பை மீட்டனர் புலிகள். புலிகளின் துல்லியமான அதேநேரம் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்கள் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

பின் வந்த ஆனையிறவு மீதான சுற்றிவளைப்புத் தாக்குதலுட்பட அனைத்திலுமே பீரங்கிப்படையணி முக்கிய பங்காற்றியது. பரந்தனில் பட்டப்பகலில் எதிரிக்குச் சொல்லிவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முழுவதும் பீரங்கிப்படையணியிலேயே தங்கியிருந்தது. இதேவேளை அவ்வப்போது பலாலி மீதும் காங்கேசன்துறை மீதும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி கலங்கடித்தனர் புலிகள். யாழ்ப்பாணச் சமரிலும் பீரங்கித் தாக்குதலைத் தாராளமாகப் பயன்படுத்தினர்.

ஆனையிறவில் மேலும் சில ஆட்லறிகள் புலிகளுக்குக் கிடைத்தன. எதிரிகளுக்கு புலிகளின் பீரங்கிப்பலம் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது.

குறிப்பிடக் கூடிய இறுதிச்சண்டையான "தீச்சுவாலை" முறியடிப்புச் சமரில் புலிகளின் பீரங்கிப்பலத்தை உலகமே வியந்தது. அந்த மூன்று நாட்சண்டைகளிலும் புலிகள் பயன்படுத்திய எறிகணைகளின் எண்ணிக்கையும் அவற்றின் துல்லியத்தன்மையும் அனைவரையும் திகைக்கச் செய்தது.

பீரங்கிப் படையணியின் இவ்வெற்றிகளுக்கு பல துணைக்காரணிகளும் முக்கியமானவை.
முன்னணி அவதானிப்பாளர் என்று சிலர் செயற்படுவார்கள். பீரங்கிச் சூட்டின் வழுக்களைக் கவனித்துத் தெரிவிக்க வேண்டும். இவற்றைச் சரியான முறையில் சம்பந்தப்பட்ட பீரங்கிகளுக்கு அறிவித்து வழுக்களைத் திருத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒருங்கிணைப்பு சரியாக இருக்க வேண்டும். பல பீரங்கிகளை வைத்துத் தாக்குதல் நடத்தும்போது ஏற்படும் தகவற்பரிமாற்றச் சிக்கல்களைச் சரியாகக் கையாள வேண்டும். ஒருங்கிணைப்புத் தவறுகளால் இலக்குச் சரியாகத் தாக்கப்படாமற் போகவும், எறிகணைகளின் வீணாகப் போவதற்கும், சில சமயங்களில் சொந்தப் படையே தாக்குதலுக்குள்ளாகவும் வாய்ப்புண்டு.

இக்கட்டினமாக பணியை அனைவரும் செய்திட முடியாது. ஏற்கனவே புலிகளில் இப்படியான ஒருங்கிணைப்பாளர்கள் திறமையாகவே செயற்பட்டிருக்கிறார்கள். தேவைக்கு ஏற்றாற்போல் ஒருங்கிணைப்பாளர்களைக் கையாண்டிருக்கிறார்கள்.

எனினும் இப்போது முறைப்படி பயிற்சி நெறியொன்றை இரு அணிகளுக்கு முழுமையாக அளித்து நிறைவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் தகுதியான ஒருங்கிணைப்பாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார்கள் என்பதோடு இன்னும் உருவாக்கப் போகிறார்கள் என்பதும் உண்மை. கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் இனிமேல் வராமலிருப்பதை உறுதி செய்கிறார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் குறிப்பிட்ட பணிக்கு ஆட்பற்றாக்குறை வராமல் இருப்பதையும் உறுதி செய்கிறார்கள்.

பீரங்கிச்சூட்டு ஒருங்கிணைப்புப் பயற்சியை ஒரு நெறியாகவே நடத்தி முடிக்கிறார்கள் என்ற அளவில் புலிகளின் பீரங்கிப் படையணியும் ஆயுத, ஆட்பலத்தில் பெருகியுள்ளது என்பதையே இது காட்டுக்கிறது.

//பீரங்கிச்சூட்டு ஒருங்கிணைப்புப் பயற்சியை ஒரு நெறியாகவே நடத்தி முடிக்கிறார்கள் என்ற அளவில் புலிகளின் பீரங்கிப் படையணியும் ஆயுத, ஆட்பலத்தில் பெருகியுள்ளது என்பதையே இது காட்டுக்கிறது.//

ஆம்.
தற்போது நடந்து முடிந்துள்ள திருகோணமலைத் தாக்குதல்கள் இதைத்தான் சொல்கின்றன. துறைமுகத்துள் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் புலிகளின் வளர்ச்சியைச் சொல்கிறது.

/புலிகள் பயன்படுத்திய எறிகணைகளின் எண்ணிக்கையும் அவற்றின் துல்லியத்தன்மையும் அனைவரையும் திகைக்கச் செய்தது.புலிகளின் பீரங்கிப்பலத்தை உலகமே வியந்தது./

இப்படைதோற்கின் எப்படை வெல்லும்.

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

Post a Comment